இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரமாண்டமான படங்களை எடுப்பது போலவே புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பிரமாண்டம் காட்டும் பணியையும் செய்து வருகிறார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜாமவுலி. தற்போது ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கனை வைத்து அவர் இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பரபரப்பாக இருக்கிறார். அந்தவகையில் சமீபத்தில் தென்னிந்தியா முழுவதும் படக்குழுவினருடன் சுற்றிய ராஜமவுலி இந்தப்படத்தின் ஹிந்தி வெளியீட்டிற்கான மாபெரும் புரமோஷன் நிகழ்ச்சியை மும்பையில் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நிகழ்வில் பிரமாண்டம் காட்ட தீர்மானித்துள்ள ராஜமவுலி, ஐதராபாத்தில் இருந்து கிட்டத்தட்ட 3000 ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மும்பை வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இவர்கள் அனைவரும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ரசிகர்கள். இந்த மாபெரும் கூட்டத்தை கூட்டுவதன் மூலம் பாலிவுட்டில் ஆர்ஆர்ஆர் படத்திற்கான அதிர்வலைகளை ஏற்படுத்துவதற்கான ராஜமவுலியின் மாஸ்டர் பிளான் இது என்று சொல்கிறார்கள்.