மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மலையாள சினிமாவின் எவர்கிரீன் சாக்லேட் ஹீரோ என இப்போதும் அழைக்கப்படும் நடிகர் குஞ்சாக்கோ போபன், விரைவில் ரெண்டகம் என்கிற படம் மூலம் தமிழுக்கும் வர இருக்கிறார். நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் புதிதாக நடிக்க உள்ள 'எந்தாடா ஷாஜி என்கிற படத்தின் அறிவிப்பை வெளியிட்டனர். தனுஷின் மாரி படத்தை தயாரித்த லிஸ்டின் ஸ்டீபன் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.
இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபனுடன் நடிகர் ஜெயசூர்யாவும் இணைந்து நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ஸ்வப்னகூடு, ஸ்கூல் பஸ், குல்மால் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான ஷாஜகானும் பரீக்குட்டியும் என்கிற படத்தில் நடித்திருந்த இவர்கள் இருவரும், இந்தப்படத்தில் மீண்டும் இணைகின்றனர்.