25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
மலையாள திரையுலகில் நல்ல கதை அம்சங்கள் மட்டுமே கொண்ட படங்கள் குறைந்த பட்ஜெட் செலவில் வெளியாகி வந்த நிலையில் சமீப வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிற்கு சவால் விடும் அளவிற்கு பெரிய பட்ஜெட் படங்களை உருவாக்க துவங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக பீரியட் படங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் அஜயன்டே ரெண்டாம் மோசனம் என்கிற படம் மூன்று வித காலகட்டங்களில் நிகழும் ஒரு பீரியட் படமாக வெளியானது. அடுத்ததாக மோகன்லால் முதன்முறையாக இயக்குனராக இயக்கியுள்ள பரோஸ் திரைப்படமும் வாஸ்கோடகாமா காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது, விரைவில் வெளியாகவும் உள்ளது.
இந்த நிலையில் நடிகர் ஜெயசூர்யாவின் திரை உலக பயணத்தில் அவர் முதன்முறையாக மிகப்பெரிய பட்ஜெட்டில் நடிக்கும் படமாக கத்தனார் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஜெயசூர்யா தவிர பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மலையாள திரை உலகில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் நடிகை அனுஷ்கா. ஹோம் என்கிற படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜின் தாமஸ் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படமும் வரலாற்று பின்னணியில் தான் உருவாகிறது.
அதுமட்டுமல்ல மலையாள திரையுலகிலேயே முதன்முறையாக இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் படமும் இதுதான். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக தெரிவித்துள்ளார் நடிகர் ஜெயசூர்யா. இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 18 மாதங்களாக 6 கட்ட படப்பிடிப்புகளாக 212 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்கிற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.