‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

பிரபல தெலுங்கு குணசித்ர நடிகர் ராஜபாபு. ஐதராபாத்தில் வசித்து வந்த ராஜபாபுவுக்கு கடந்த சில நாட்களாக, உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானார். அவருடைய மறைவிற்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ராஜபாபு ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நரசபுரபுபேட்டாவைச் சேர்ந்தவர். 1981 ஆம் ஆண்டு கிருஷ்ணா மற்றும் ஜெயபிரதா நடித்த ஊரிக்கு மோனகாடு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து 60க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்ர மற்றும் காமெடி வேடங்களில் நடித்தார்.
வெங்கடேஷ், மகேஷ்பாபு நடித்த சீதம்மா வாகிட்லோ ஸ்ரீமல்லே செட்டு, மகேஷ்பாபுவின் பிரம்மோத்சவம், வெங்கடேஷ், த்ரிஷா நடித்த ஆடவரி மாட்லாக்கு அர்த்தலே வேருலே, சமுத்திரம், மல்லி ராவா போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்கள். பின்னர் சின்னத்திரை தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். 2005 ஆம் ஆண்டு அம்மா என்ற தொடரில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை பெற்றார்.