'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா |

கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது கணவர் நாக சைதன்யாவுடன் தனது திருமண முறிவு குறித்து அறிவித்தார் நடிகை சமந்தா. ஆனால் அதன்பின் தன்னை பற்றியும் தனது கணவருடனான விவாகரத்து குறித்தும் அவதூறு பரப்பும் விதமாக செய்திகள் வெளியிட்டதாக சில யூட்யூப் சேனல்கள் மீது போலீசில் புகார் அளிதததுடன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தொடர்ந்தார் நடிகை சமந்தா.
இந்தநிலையில் சமீபத்தில் தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்று அதில் நடிகர் பிரகாஷ்ராஜை எதிர்த்து போட்டியிட்ட நடிகர் விஷ்ணு மஞ்சு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், தற்போது தலைவராக பொறுப்பேற்றுள்ள விஷ்ணு மஞ்சு சமந்தா விவகாரத்தை தொடர்ந்து யூட்யூப் சேனல்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் விரைவில் யூட்யூப் நிறுவன உரிமையாளர்களையும் அழைத்து தங்கள் சட்ட ஆலோசனை குழுவுடன் சேர்ந்து இதுகுறித்த கலந்துரையாடல் ஒன்றையும் நடத்த உள்ளாராம் விஷ்ணு மஞ்சு.