தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது கணவர் நாக சைதன்யாவுடன் தனது திருமண முறிவு குறித்து அறிவித்தார் நடிகை சமந்தா. ஆனால் அதன்பின் தன்னை பற்றியும் தனது கணவருடனான விவாகரத்து குறித்தும் அவதூறு பரப்பும் விதமாக செய்திகள் வெளியிட்டதாக சில யூட்யூப் சேனல்கள் மீது போலீசில் புகார் அளிதததுடன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தொடர்ந்தார் நடிகை சமந்தா.
இந்தநிலையில் சமீபத்தில் தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்று அதில் நடிகர் பிரகாஷ்ராஜை எதிர்த்து போட்டியிட்ட நடிகர் விஷ்ணு மஞ்சு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், தற்போது தலைவராக பொறுப்பேற்றுள்ள விஷ்ணு மஞ்சு சமந்தா விவகாரத்தை தொடர்ந்து யூட்யூப் சேனல்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் விரைவில் யூட்யூப் நிறுவன உரிமையாளர்களையும் அழைத்து தங்கள் சட்ட ஆலோசனை குழுவுடன் சேர்ந்து இதுகுறித்த கலந்துரையாடல் ஒன்றையும் நடத்த உள்ளாராம் விஷ்ணு மஞ்சு.