எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
மலையாள திரையுலகில் பிரபல கமர்ஷியல் இயக்குனர் ஷாஜி கைலாஷ், நடிகர் பிரித்விராஜை வைத்து 'கடுவா' என்கிற ஆக்சன் படத்தை இயக்கி வந்தார். இவர்கள் இருவரும் முதன்முறையாக கூட்டணி சேர்ந்துள்ள இந்தப்படம் கடந்த வருடம் துவங்கப்பட்டு ஒரு சில சிக்கல்களாலும் கொரோனா ஊரடங்காலும் ஒருகட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அப்படியே நின்றது.
அதையடுத்து பிரித்விராஜ் சில படங்களில் நடித்துவிட்டு, மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற படத்தையும் இயக்கி முடித்து விட்டார். அதேபோல ஷாஜி கைலாஷும் மோகன்லாலை வைத்து குறுகிய நாட்களிலேயே அலோன் என்கிற படத்தையும் இயக்கி முடித்து விட்டார்.
இதற்குள் கடுவா படத்திற்கு எழுந்த சில பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு விட்ட நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து தற்போது அந்தப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். ஒரு இளம் தோட்டக்காரனை பற்றிய கதையாக உருவாகும் இந்தப்படம் பல வருடங்களுக்கு முன் பிரபலமாக இருந்த, தற்போதும் உயிரோடு இருக்க கூடிய கடுவாகுன்னால் குருவச்சன் ஜோஸ் என்பவரை பற்றியாக கதையாக உருவாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.