சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
மலையாள திரையுலகில் பிரபல கமர்ஷியல் இயக்குனர் ஷாஜி கைலாஷ், நடிகர் பிரித்விராஜை வைத்து 'கடுவா' என்கிற ஆக்சன் படத்தை இயக்கி வந்தார். இவர்கள் இருவரும் முதன்முறையாக கூட்டணி சேர்ந்துள்ள இந்தப்படம் கடந்த வருடம் துவங்கப்பட்டு ஒரு சில சிக்கல்களாலும் கொரோனா ஊரடங்காலும் ஒருகட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அப்படியே நின்றது.
அதையடுத்து பிரித்விராஜ் சில படங்களில் நடித்துவிட்டு, மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற படத்தையும் இயக்கி முடித்து விட்டார். அதேபோல ஷாஜி கைலாஷும் மோகன்லாலை வைத்து குறுகிய நாட்களிலேயே அலோன் என்கிற படத்தையும் இயக்கி முடித்து விட்டார்.
இதற்குள் கடுவா படத்திற்கு எழுந்த சில பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு விட்ட நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து தற்போது அந்தப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். ஒரு இளம் தோட்டக்காரனை பற்றிய கதையாக உருவாகும் இந்தப்படம் பல வருடங்களுக்கு முன் பிரபலமாக இருந்த, தற்போதும் உயிரோடு இருக்க கூடிய கடுவாகுன்னால் குருவச்சன் ஜோஸ் என்பவரை பற்றியாக கதையாக உருவாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.