புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
இந்தியாவின் பிற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு விட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் 50 சதவிகித இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வரும் 25ம் தேதி 50 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும். விடுமுறை விடப்பட்ட நாட்களில் மின்வாரியத்தின் வைப்பு நிதியை ரத்து செய்ய வேண்டும். சொத்து வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே தியேட்டர்களை திறப்போம் என தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக நாளை(22ம் தேதி) தியேட்டர் உரிமையாளர்களுடன் கேரள காலச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே தியேட்டர்கள் திறக்கப்படும் என்று தெரிகிறது.