'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் |
இந்தியாவின் பிற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு விட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் 50 சதவிகித இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வரும் 25ம் தேதி 50 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும். விடுமுறை விடப்பட்ட நாட்களில் மின்வாரியத்தின் வைப்பு நிதியை ரத்து செய்ய வேண்டும். சொத்து வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே தியேட்டர்களை திறப்போம் என தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக நாளை(22ம் தேதி) தியேட்டர் உரிமையாளர்களுடன் கேரள காலச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே தியேட்டர்கள் திறக்கப்படும் என்று தெரிகிறது.