லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
மலையாள நடிகர் திலீப் தனது முதல் மனைவி நடிகை மஞ்சுவாரியரை விவாகரத்து செய்துவிட்டு அதன்பின்னர் தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகை காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே முதல் மனைவி மூலமாக டீன் ஏஜ் பருவத்தில் மீனாட்சி என்கிற மகள் இருக்கும் நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திலீப்புக்கும் காவ்யா மாதவனுக்கும் மகாலட்சுமி என்கிற பெண் குழந்தை பிறந்தது.
தற்போது இரண்டு வருடங்கள் ஆன நிலையில் விஜயதசமி தினத்தன்று வழக்கமான நடைமுறையான வித்யாபரம் எனப்படும் குழந்தைக்கு கல்வி அறிவு புகட்டும் நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளார் திலீப். முதல் எழுத்தாக அம்மா என்கிற வார்த்தையை எழுத வைத்த திலீப், இந்த நிகழ்ச்சியின்போது எடுத்த புகைப்படங்களை தற்போது சோஷியல் மீடியாவிலும் பகிர்ந்து கொண்டுள்ளார்.