நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
படம் : மன்மதன்
வெளியான ஆண்டு : 2004
நடிகர்கள் : சிம்பு, ஜோதிகா, கவுண்டமணி, சந்தானம், சிந்து துலானி
இயக்கம் : ஏ.ஜே.முருகன்
தயாரிப்பு : எஸ்.கே.கிருஷ்ணகாந்த்
கதாநாயகனாக சிம்பு நடிக்க துவங்கி, வெள்ளி விழா கண்ட முதல் படம், மன்மதன். கதை, திரைக்கதை, இயக்கம் மேற்பார்வை என, முழுக்க முழுக்க சிம்புவின் கைவண்ணத்தில் உருவான படம் இது. ஏ.ஜே.முருகன் பெயர், இயக்குனர் என, இடம்பெற்றிருந்தாலும், அப்பணியையும் சிம்புவே மேற்கொண்டார்.
சிவப்பு ரோஜாக்கள் படத்தின் கதையை தான், கொஞ்சம், 'பட்டி டிங்கரிங்' பார்த்து, மன்மதன் கதையை உருவாக்கியிருந்தனர். சிம்பு, முதல்முறை இரட்டை வேடத்தில் நடித்தார். ஒட்ட வெட்டிய கிராப் தலை; அப்பாவித்தனமான முக பாவங்களோடு வலம் வந்த, கிராமத்து வாசமுடைய தம்பி மதன்ராஜ், அனுதாபத்தை அள்ளினார். அதேபோல, நவநாகரீக தோற்றத்தில் இருக்கும் அண்ணன் மதன்குமார், பெண்களை கொலை செய்யும், 'சைக்கோ' தனமான நடிப்பை காட்டி, மிரளச் செய்தார்.
இப்படத்தில் வடமாநில மாடல் அழகி, யானா குப்தா; உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை தொகுத்து வழங்கிய கவர்ச்சி புயல், மந்திரா பேடி; அப்புறம் நம் ஜோதிகா என, அழகிகளும் அணிவகுத்தனர். ஆபாச காட்சிகளும், கொலைகளும் இடம் பெற்றதால், இப்படத்திற்கு தணிக்கை குழு, 'ஏ' சான்றிதழ் வழங்கியது.
சினிமா பயணத்தில், தனுஷுக்கு எதிராக சிம்பு என்ற பிம்பம், இப்படத்தில் இருந்து தான் உருவானது. இப்படம், பெரும் வெற்றியை பெற்றது. தெலுங்கில், மன்மதா என்ற பெயரில், 'டப்பிங்' செய்யப்பட்டும், கன்னடத்தில், மதனா என்ற பெயரில், 'ரீமேக்'கும் செய்யப்பட்டது. படத்தின் வெற்றியில், யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கும் முக்கிய பங்கு உண்டு. 'தத்தை தத்தை, மன்மதனே நீ, என் ஆசை மைதிலியே, காதல் வளர்த்தேன்...' பாடல்கள், பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.
மிரளச் செய்தான் மன்மதன்!