ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் |

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா இளம் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அவர்களை பயன்படுத்தி ஆபாச படம் உருவாக்கி, அதனை மொபைல் செயலியில் வெளியிட்டதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் தற்போது ஷெர்லின் சோப்ரா விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணிக்கு மும்பை போலீசின் சைபர் குற்றப்பிரிவின் முன் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விசாரணையில் இருந்து விலக்கு கேட்டு ஷெர்லின் சோப்ரா முன் ஜாமீன் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது. எனவே ஆபாச பட விவகாரத்தில் ஷெர்லின் சோப்ராவின் பங்கு என்ன என்று பாலிவுட் வட்டராங்கள் பரபரப்பாகி உள்ளன.
ராஜ் குந்த்ராவிடம் பணிபுரிந்த அரவிந்த் ஸ்ரீவத்சவா என்பவர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் மீது மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மாநிலங்களில் 90க்கு மேற்பட்ட ஆபாச படங்களை பரப்பி உள்ளதாகவும், ராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் இவர் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டுள்ளார் என்றும் போலீஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன. அரவிந்தின் வங்கி கணக்கில் இருந்த 3 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.