தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா இளம் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அவர்களை பயன்படுத்தி ஆபாச படம் உருவாக்கி, அதனை மொபைல் செயலியில் வெளியிட்டதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் தற்போது ஷெர்லின் சோப்ரா விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணிக்கு மும்பை போலீசின் சைபர் குற்றப்பிரிவின் முன் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விசாரணையில் இருந்து விலக்கு கேட்டு ஷெர்லின் சோப்ரா முன் ஜாமீன் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது. எனவே ஆபாச பட விவகாரத்தில் ஷெர்லின் சோப்ராவின் பங்கு என்ன என்று பாலிவுட் வட்டராங்கள் பரபரப்பாகி உள்ளன.
ராஜ் குந்த்ராவிடம் பணிபுரிந்த அரவிந்த் ஸ்ரீவத்சவா என்பவர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் மீது மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மாநிலங்களில் 90க்கு மேற்பட்ட ஆபாச படங்களை பரப்பி உள்ளதாகவும், ராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் இவர் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டுள்ளார் என்றும் போலீஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன. அரவிந்தின் வங்கி கணக்கில் இருந்த 3 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.




