விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
மாடல் அழகிகளை ஆபாச படம் எடுத்து விற்றதாக எழுந்த புகாரின் பேரில் நடிகை ஷில்பா ஷெட்டி கணவரான ராஜ் குந்த்ராவை கடந்த ஜூலை 19ம் தேதி மும்பை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் நடிகைகள் பூனம் பாண்டே, ஷெர்லின் சோப்ராவுக்கு தொடர்பிருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் ஆபாச படங்களுக்கென தனி மொபைல் ஆப் உருவாக்கி அதில் ஆபாச படங்களை ராஜ் குந்த்ரே பதிவிட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணை ஓராண்டுக்கு மேலாக நடந்து வந்த நிலையில், தற்போது மும்பை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்கள். 450 பக்கங்கள் கொண்ட இதில், பைவ் ஸ்டார் ஹோட்டலில் ஆபாச படங்கள் எடுக்கப்பட்டு அவை ராஜ் குந்த்ராவின் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு மொபைல் ஆப்புகள் மூலம் வெளியிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக ராஜ் குந்த்ரா நிறுவனம் குறிப்பிட்ட தொகையை வசூல் செய்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஷெல்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனபோதிலும் அவர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருப்பதோடு, வியாபார போட்டி காரணமாக தன்னை இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளார்கள் என்று தனது தரப்பில் அவர் வாதம் செய்து வருவதாகவும் மும்பை போலீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளன.