ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா கடந்த ஜூன் மாதம் ஆபாச படங்கள் தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது ஆபாச படமெடுப்பதில் ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு இருப்பதாக செய்தி வெளியாக அது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார் ஷில்பா ஷெட்டி.
இப்படியான நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் நடந்த சம்பவங்கள் குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார் ஷில்பா. அதில், சில தவறுகளை செய்யாமல் வாழ்க்கை சுவராஸ்யமாக இருக்காது. ஆனால் அந்த தவறுகள் பிறரை காயப்படுத்தாத அபாயகரமான தவறுகளாக இருக்காது என்று நம்புவோம். ஆனால் தவறுகள் செய்யப்போகிறேன். அதிலிருந்து என்னை மன்னித்து, அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வேன் என்று தெரிவித்துள்ள ஷில்பா ஷெட்டி, நான் தவறு செய்து விட்டேன். ஆனாலும் பரவாயில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.




