10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா கடந்த ஜூன் மாதம் ஆபாச படங்கள் தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது ஆபாச படமெடுப்பதில் ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு இருப்பதாக செய்தி வெளியாக அது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார் ஷில்பா ஷெட்டி.
இப்படியான நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் நடந்த சம்பவங்கள் குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார் ஷில்பா. அதில், சில தவறுகளை செய்யாமல் வாழ்க்கை சுவராஸ்யமாக இருக்காது. ஆனால் அந்த தவறுகள் பிறரை காயப்படுத்தாத அபாயகரமான தவறுகளாக இருக்காது என்று நம்புவோம். ஆனால் தவறுகள் செய்யப்போகிறேன். அதிலிருந்து என்னை மன்னித்து, அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வேன் என்று தெரிவித்துள்ள ஷில்பா ஷெட்டி, நான் தவறு செய்து விட்டேன். ஆனாலும் பரவாயில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.