நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள் | ரீ ரிலீஸில் மோதும் விஜய், அஜித் | சூர்யாவுக்கு வைத்திருந்த 'இரும்புக் கை மாயாவி', கை மாறிவிட்டதா ? | துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் | பிரபாஸின் ஸ்பிரிட் பட ரிலீஸ் தேதி வெளியானது | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் சிறை | கவலையில் கிர்த்தி ஷெட்டி, பிரார்த்தனா, நிதி அகர்வால், மாளவிகா மோகனன் | மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது | அடுத்தடுத்து தனுஷ் மீது தொடரும் அவதூறுகள் | ஹீரோயின் விஷயத்தில் பிரதீப் ரங்கநாதன் கில்லாடி |

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மெய்க்காப்பாளரான ஜிதேந்திர ஷிண்டே என்பவர் ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பாதித்ததாக ஒரு புகார் எழுந்துள்ளது. அதோடு 5 வருடங்களுக்கு பிறகு ஒரு பிரபலத்திற்கு ஏற்கனவே நியமிக்கப்பட்ட நபர் பாடிகார்டாக இருக்கக்கூடாது என்கிற விதி இருந்தபோதும், இந்த ஜிதேந்திர ஷிண்டே அமிதாப்பச்சனிடம் ஆறு ஆண்டுகளாக இருந்துள்ளார்.
இந்தநிலையில் ஜிதேந்திர ஷிண்டே, வருடத்துக்கு ஒன்றரை கோடி ரூபாயை அமிதாப்பச்சனிடம சம்பாதித்தாரா? இல்லை வேறு வழியில் சம்பாதித்தாரா? என்று அவரிடத்தில் மும்பை போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது. இந்தவிசாரணையில், தனது மனைவி ஒரு செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதன்மூலம் மும்பை பிரபலங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதால் இந்த ஒன்றரை கோடி வருமானம் கிடைத்து வருவதாகவும் விசாரணையில் அவர் கூறியிருக்கிறார்.
இந்த விசாரணைக்குப்பிறகு அமிதாப்பச்சனிடம் கடந்த 6 ஆண்டுகளாக செக்யூரிட்டியாக இருந்து வந்த ஜிதேந்திர ஷிண்டே மும்பை தெற்கு காவல் நிலையத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.