அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மெய்க்காப்பாளரான ஜிதேந்திர ஷிண்டே என்பவர் ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பாதித்ததாக ஒரு புகார் எழுந்துள்ளது. அதோடு 5 வருடங்களுக்கு பிறகு ஒரு பிரபலத்திற்கு ஏற்கனவே நியமிக்கப்பட்ட நபர் பாடிகார்டாக இருக்கக்கூடாது என்கிற விதி இருந்தபோதும், இந்த ஜிதேந்திர ஷிண்டே அமிதாப்பச்சனிடம் ஆறு ஆண்டுகளாக இருந்துள்ளார்.
இந்தநிலையில் ஜிதேந்திர ஷிண்டே, வருடத்துக்கு ஒன்றரை கோடி ரூபாயை அமிதாப்பச்சனிடம சம்பாதித்தாரா? இல்லை வேறு வழியில் சம்பாதித்தாரா? என்று அவரிடத்தில் மும்பை போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது. இந்தவிசாரணையில், தனது மனைவி ஒரு செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதன்மூலம் மும்பை பிரபலங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதால் இந்த ஒன்றரை கோடி வருமானம் கிடைத்து வருவதாகவும் விசாரணையில் அவர் கூறியிருக்கிறார்.
இந்த விசாரணைக்குப்பிறகு அமிதாப்பச்சனிடம் கடந்த 6 ஆண்டுகளாக செக்யூரிட்டியாக இருந்து வந்த ஜிதேந்திர ஷிண்டே மும்பை தெற்கு காவல் நிலையத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.