தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா கடந்த ஜூன் மாதம் ஆபாச படங்கள் தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது ஆபாச படமெடுப்பதில் ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு இருப்பதாக செய்தி வெளியாக அது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார் ஷில்பா ஷெட்டி.
இப்படியான நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் நடந்த சம்பவங்கள் குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார் ஷில்பா. அதில், சில தவறுகளை செய்யாமல் வாழ்க்கை சுவராஸ்யமாக இருக்காது. ஆனால் அந்த தவறுகள் பிறரை காயப்படுத்தாத அபாயகரமான தவறுகளாக இருக்காது என்று நம்புவோம். ஆனால் தவறுகள் செய்யப்போகிறேன். அதிலிருந்து என்னை மன்னித்து, அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வேன் என்று தெரிவித்துள்ள ஷில்பா ஷெட்டி, நான் தவறு செய்து விட்டேன். ஆனாலும் பரவாயில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.