ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
மும்பை: என் கணவர் அப்பாவி; ஆபாச படங்கள் தயாரிப்புக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை, என, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கிய ஷில்பா ஷெட்டி, தமிழில் குஷி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் ராஜ் குந்த்ரா; தொழில் அதிபர். சினிமா வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை ஆபாச படங்களில் நடிக்க வைத்து, அவற்றை மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்து, கோடி கோடியாய் பணம் சம்பாதித்த புகாரில் ராஜ் குந்த்ரா உட்பட 11 பேரை, மும்பை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
இந்நிலையில் ஆபாச படங்கள் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து ஷில்பா ஷெட்டியிடம் போலீசார் நேற்று விசாரித்தனர். அப்போது அவர், என் கணவர் அப்பாவி; ஆபாச படம் தயாரிப்பில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆபாச படம் வெளியிடப்பட்ட செயலியை பிரிட்டனில் உள்ள என் கணவரின் மைத்துனர் பிரதீப் பக் ஷி தான் நடத்தி வந்தார். ஆபாச செயலியின் உள்ளடக்கங்கள் குறித்த விபரங்கள் எதுவும் எனக்கு தெரியாது, என்றார்.