மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் | 'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? |

மும்பை: என் கணவர் அப்பாவி; ஆபாச படங்கள் தயாரிப்புக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை, என, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கிய ஷில்பா ஷெட்டி, தமிழில் குஷி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் ராஜ் குந்த்ரா; தொழில் அதிபர். சினிமா வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை ஆபாச படங்களில் நடிக்க வைத்து, அவற்றை மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்து, கோடி கோடியாய் பணம் சம்பாதித்த புகாரில் ராஜ் குந்த்ரா உட்பட 11 பேரை, மும்பை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
இந்நிலையில் ஆபாச படங்கள் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து ஷில்பா ஷெட்டியிடம் போலீசார் நேற்று விசாரித்தனர். அப்போது அவர், என் கணவர் அப்பாவி; ஆபாச படம் தயாரிப்பில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆபாச படம் வெளியிடப்பட்ட செயலியை பிரிட்டனில் உள்ள என் கணவரின் மைத்துனர் பிரதீப் பக் ஷி தான் நடத்தி வந்தார். ஆபாச செயலியின் உள்ளடக்கங்கள் குறித்த விபரங்கள் எதுவும் எனக்கு தெரியாது, என்றார்.