ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த பாலிவுட் திரைப்பட தொழிலாளர்களுக்கு பாலிவுட் நடிகர்கள் ஏராளமான உதவிகள் செய்து வருகிறார்கள். அதில் முன்னணியில் இருப்பவர்கள் அக்ஷய்குமாரும், சோனு சூட்டும். அக்ஷய் குமார் கொரோனா முதல் அலையின்போது சுமார் 30 கோடி வரை நிதி உதவி செய்தார். இரண்டாவது அலையிலும் இதுவரை 5 கோடிக்கு மேல் வழங்கி உள்ளார்.
இந்த நிலையில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்றுக் காலகட்டம் சினிமா கலைஞர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. தேவையான தருணங்களில் கலைஞர்கள் நாட்டுக்கு ஆதரவாக நிற்கின்றனர். இந்த முக்கியமான காலகட்டத்தில் மக்கள் முன்வந்து அவர்களுக்குத் துணையாக நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.