22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த பாலிவுட் திரைப்பட தொழிலாளர்களுக்கு பாலிவுட் நடிகர்கள் ஏராளமான உதவிகள் செய்து வருகிறார்கள். அதில் முன்னணியில் இருப்பவர்கள் அக்ஷய்குமாரும், சோனு சூட்டும். அக்ஷய் குமார் கொரோனா முதல் அலையின்போது சுமார் 30 கோடி வரை நிதி உதவி செய்தார். இரண்டாவது அலையிலும் இதுவரை 5 கோடிக்கு மேல் வழங்கி உள்ளார்.
இந்த நிலையில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்றுக் காலகட்டம் சினிமா கலைஞர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. தேவையான தருணங்களில் கலைஞர்கள் நாட்டுக்கு ஆதரவாக நிற்கின்றனர். இந்த முக்கியமான காலகட்டத்தில் மக்கள் முன்வந்து அவர்களுக்குத் துணையாக நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.