விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

மும்பை: என் கணவர் அப்பாவி; ஆபாச படங்கள் தயாரிப்புக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை, என, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கிய ஷில்பா ஷெட்டி, தமிழில் குஷி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் ராஜ் குந்த்ரா; தொழில் அதிபர். சினிமா வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை ஆபாச படங்களில் நடிக்க வைத்து, அவற்றை மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்து, கோடி கோடியாய் பணம் சம்பாதித்த புகாரில் ராஜ் குந்த்ரா உட்பட 11 பேரை, மும்பை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
இந்நிலையில் ஆபாச படங்கள் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து ஷில்பா ஷெட்டியிடம் போலீசார் நேற்று விசாரித்தனர். அப்போது அவர், என் கணவர் அப்பாவி; ஆபாச படம் தயாரிப்பில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆபாச படம் வெளியிடப்பட்ட செயலியை பிரிட்டனில் உள்ள என் கணவரின் மைத்துனர் பிரதீப் பக் ஷி தான் நடத்தி வந்தார். ஆபாச செயலியின் உள்ளடக்கங்கள் குறித்த விபரங்கள் எதுவும் எனக்கு தெரியாது, என்றார்.