ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி | தந்தை நடிகரின் மிரட்டலால் ஓட்டம் பிடித்த நடிகை | 'ஜனநாயகன்' படத்திற்குக் கடும் சவாலாக இருக்கும் 'ராஜா சாப்' | தெலுங்கு லிரிக் வீடியோவில் புதிய சாதனை படைத்த ஏஆர் ரஹ்மானின் 'பெத்தி' | முந்தைய சாதனையை முறியடிக்குமா விஜய் - அனிருத் கூட்டணி? | இரண்டு கைகளிலும் கடிகாரம் அணிவது ஏன் ? ; அபிஷேக் பச்சனின் அடடே விளக்கம் | ‛ப்ரோ கோட்' டைட்டில் விவகாரம் ; ரவி மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு | நவம்பர் இறுதியில் ரீ ரிலீஸ் ஆகும் மகேஷ்பாபுவின் பிசினஸ்மேன் |

பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஏற்கனவே கார் விபத்து வழக்கு, மான்கறி வழக்கு என பல சர்ச்சைகளில் சிக்கியவர். இந்தநிலையில் மோசடி வழக்கு ஒன்றிற்காக சல்மான்கான் மற்றும் அவரது தங்கை உள்ளிட்ட ஏழு பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது சண்டிகர் போலீஸ். சண்டிகரை சேர்ந்த அருண் குப்தா என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
விஷயம் இதுதான்.. சல்மான்கான் 'பீயிங் ஹ்யூமன்' என்கிற அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார் சில மாதங்களுக்கு முன்பு, இந்த அறக்கட்டளையை சேர்ந்த இருவர் அருண் குப்தாவை தொடர்பு கொண்டு, இந்த அறக்கட்டளையின் கிளை ஒன்றை ஆரம்பித்து அதன்மூலம் புதிய வியாபாரம் துவங்குங்கள் என்றும் அதை சல்மான்கான் வந்து திறந்து வைப்பார் என்றும் கூறினார்களாம்.
அவர்கள் பேச்சை நம்பி பீயிங் ஹ்யூமன் ஜுவல்லரி என்கிற பெயரில் கடையை துவங்குவதற்காக சுமார் மூன்று கோடி ரூபாய் வரை முதலீடு செய்தாராம் அருண் குப்தா.. ஆனால் அவர்கள் சொன்னபடி சல்மான்கான் வந்து கடையை திறந்து வைக்கவில்லை, அதனால் எனக்கு நஷ்டமானது என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார் அருண் குப்தா.




