ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கொரோனா தொற்றால் லேசாக பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் தனிமைப்படுத்துக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி லேசான பாதிப்புடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அந்த தனிமையை எதிர்கொள்ளவும் ஒரு தனி தைரியம் வேண்டும். ஒரு அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பது என்பது பழக்கமில்லாதவர்களுக்கு மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் அரசுகள் ஏற்பாடு செய்துள்ளன.
பாலிவுட் நடிகையான கங்கனா ரணவத் சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்தார். பின் மும்பையிலிருந்து தனது சொந்த ஊரான குலுமணாலி சென்று குடும்பத்தினருடன் இணைந்து கொண்டார்.
“கோவிட் நேரத்தில் தனிமையாக இருந்தது தான் அதிக சவாலானது. இன்று மணாலியில் நண்பர்களையும், உறவினர்களையும் சந்திப்பது அன்பானது,” என நேற்று பதிவிட்டுள்ளார்.