இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கொரோனா தொற்றால் லேசாக பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் தனிமைப்படுத்துக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி லேசான பாதிப்புடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அந்த தனிமையை எதிர்கொள்ளவும் ஒரு தனி தைரியம் வேண்டும். ஒரு அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பது என்பது பழக்கமில்லாதவர்களுக்கு மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் அரசுகள் ஏற்பாடு செய்துள்ளன.
பாலிவுட் நடிகையான கங்கனா ரணவத் சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்தார். பின் மும்பையிலிருந்து தனது சொந்த ஊரான குலுமணாலி சென்று குடும்பத்தினருடன் இணைந்து கொண்டார்.
“கோவிட் நேரத்தில் தனிமையாக இருந்தது தான் அதிக சவாலானது. இன்று மணாலியில் நண்பர்களையும், உறவினர்களையும் சந்திப்பது அன்பானது,” என நேற்று பதிவிட்டுள்ளார்.