சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கொரோனா அலை முதல் முதலாக கடந்த வருடம் பரவிய போது தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. முடங்கிக் கிடந்த புதிய படங்களை வெளியிட மாற்று வழியாக ஓடிடி தளங்கள் மூலம் வெளியீடு நடந்தது.
தமிழ் உள்ளிட்ட முக்கிய மொழிகளில் பல புதிய படங்கள் தியேட்டர்களில் வெளியாகின. ஆனால், அவற்றில் பெரும்பாலான படங்கள் வரவேற்பைப் பெறவில்லை. ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்தன. தியேட்டர்களில் பார்க்கும் திருப்தி ஓடிடி மூலம் பார்ப்பதில் கிடைக்கவில்லை என்பதே பலரது கருத்தாக இருந்தது.
இந்த இரண்டாவது அலை பரவலின் போது பாலிவுட்டில் முதல் பெரிய ஓடிடி வெளியீடாக பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடித்த 'ராதே' படம் வெளியானது. ஆனால், படத்திற்கு மோசமான விமர்சனங்களும், வரவேற்பும்தான் கிடைத்தது. 249 ரூபாய் பணம் செலுத்தி பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள்.
இதனிடையே, பைரசி மூலம் பல ரசிகர்கள் படங்களைப் பார்த்தது குறித்தும் சல்மான் கோபமடைந்தார். படத்தைக் கிண்டலடித்து விமர்சனம் செய்த கமால் கான் என்பவர் மீது சல்மான் கான் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சல்மானின் வழக்கு முடிவுக்கு ரசிகர்கள் பலரும் அவரை விமர்சித்தனர்.
இப்படி தேவையில்லாத சர்ச்சைகள் வந்ததையடுத்து சல்மான் கான் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். இனி, எக்காரணத்தைக் கொண்டும் தன்னுடைய படங்களை ஓடிடியில் வெளியிடுவதில்லை, தியேட்டர்களில் மட்டுமே வெளியிடுவோம் என்று சொல்லிவிட்டாராம். இதனால், தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.