ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கருப்பு நிற ஆடை ஒன்றை அணிந்து போஸ் கொடுத்திருந்த புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலானது. ஆனால் ஏற்கனவே நடிகை தீபிகா படுகோனே வெளியிட்டிருந்த புகைப்படம் ஒன்றில் இதேபோன்ற உடையை அணிந்திருந்ததாக குறிப்பிட்டு, இரண்டும் ஒன்று போலவே இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது.
ஆனால் இந்த ஒப்பீட்டை விரும்பாத பிரியங்கா சோப்ராவின் அம்மா மது சோப்ரா, உடனடியாக இதற்கு பதில் கொடுத்திருக்கிறார். அதாவது, “பார்வை இல்லாதவர்கள் தான் இந்த இரண்டு உடைகளும் ஒரே மாதிரி இருப்பதாக கூறுவார்கள். தவிர பிரியங்கா எப்போதுமே உயர்தரமான சிறந்த ஆடைகளையே அணிவார்” என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் தீபிகா படுகோனின் ஆடையை மறைமுகமாக மட்டம் தட்டி பேசியிருக்கிறார். தனது இந்த கருத்தை தொடர்ந்து நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் மீரா சோப்ரா.