சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ள படம் 'காதலிக்க நேரமில்லை'. இந்த படம் வரும் ஜனவரி 14ம் தேதி வெளியாகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நித்யா மேனன் காட்டிய பாரபட்சமான நிகழ்வு ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வீடியோவாக வைரல் ஆகி வருவதுடன் நெட்டிசன்களின் கடும் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளது.
அந்த நிகழ்வுக்கு வந்த நித்யா மேனனை அந்த படத்தின் மக்கள் தொடர்பாளர் வரவேற்று பத்திரிகையாளர்களுடன் பேசுவதற்காக மைக் முன்னால் நிற்க சொல்லி பேச சொல்கிறார். அப்போது நித்யா மேனனிடம் அவர் கைகுலுக்க கை நீட்டுகிறார். ஆனால் நித்யா மேனன், ''ஐயோ எனக்கு உடம்பு சரியில்லை.. உங்களை தொட்டால் என்னிடமிருந்து கோவிட் ஏதாவது உங்களுக்கு ஒட்டிக் கொள்ள போகிறது'' எனக் கூறி சிரித்தபடியே சொல்லி கை கொடுப்பதை தவிர்க்கிறார்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே படத்தின் வில்லன் நடிகர் வினய் ராய், நித்யா மேனனை பார்த்து ஹாய் என்று கூறியபடி அருகில் வர அவரை மெதுவாக கட்டிப்பிடிக்கிறார் நித்யா மேனன். அது மட்டுமல்ல அதே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சற்று முன் வந்து தன்னை கடந்து சென்ற இயக்குனர் மிஷ்கினை தானே வலிய அழைத்து அவரது கன்னத்தில் முத்தமிட, மிஷ்கின் அவரது கையில் முத்தமிட்டார். அதேபோல், நாயகன் ஜெயம் ரவியையும் கட்டிப்பிடித்தார்.
இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள் கை கொடுத்தால் கோவிட் பரவும் என்றால் கட்டிப்பிடித்தால் மட்டும் கோவிட் பரவாதா ? பிரபலங்கள் என்றால் ஒரு மாதிரி.. சாதாரண நபர்கள் என்றால் வேறு மாதிரி நடத்துவதா.. ? இப்படி பொதுவெளியிலேயே பகிரங்கமாக நடந்து கொள்ளலாமா என்று தங்களது விமர்சனத்தை கடுமையாக வெளிப்படுத்தி வருகின்றனர்.