நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

‛‛வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2 சினிமா எனது கனவுத்திட்டம்'' என சினிமா இயக்குனர் பொன்ராம் தெரிவித்தார்.
தேனியில் உள்ள சினிமா தியேட்டரில் ரசிகர்களுடன் தான் எழுதி இயக்கிய, ‛கொம்புசீவி' படத்தின் கதாநாயகன் நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனுடன் படம் பார்த்து விட்டு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை கட்டும் போது 15க்கும் மேற்பட்ட கிராமங்களையும் சேர்த்துதான் அணை கட்டுமானம் நடந்தது. அதனால் அக்கிராமங்களில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மாற்றுத் தொழில்களுக்காக இடம் பெயர்ந்தார்கள் என்பது குறித்த கதைதான் இந்த திரைப்படம் பேசியிருக்கிறது.
1996ல் நடந்த சம்பவம், அன்றிருந்த நிலை இன்றில்லை. அணை உருவாவதற்காக இடத்தை வழங்கியவர்கள் சந்தோஷமாக இருக்கின்றனர். ஏனெனில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உட்பட 5 மாவட்டங்களுக்கு இந்த அணையில் இருந்து தண்ணீர் செல்வதால் அந்த மகிழ்ச்சி அவர்களிடம் உண்டு. ஆனால் அணைக்கு அருகில் உள்ள சக்கரைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இன்றும் தண்ணீர் பிரச்னை உள்ளது என கேள்விப்படுகிறேன். அதை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்த படத்திற்கான கதை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். அத்திரைப்படம் காமெடி, காதல் கலந்த கலவையாக இருக்கும். ரசிகர்கள், பெண்கள், ‛வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2 எடுப்பீர்களா'என கேட்கின்றனர். அத்திரைப்படம் எனது கனவுத் திட்டமாகும். கட்டாயமாக எடுப்பேன். அன்று அந்தப்படத்தில் நடித்த நடிகர்களின் வளர்ச்சி இன்று, மிக உயரமாக இருக்கிறது. அவர்கள் தற்போதைய கதாபாத்திரங்களுக்கு பொருந்துவார்களா என பார்க்க வேண்டும். இளம் தலைமுறையினர் புது முகங்களாக அதிக திறமைகளுடன் வருகின்றனர். அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும், என்றார்.