'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இந்தியத் திரையுலகின் கனவுக்கன்னியாக இருந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். அவர் மும்பை ஜுஹு பகுதியில் வாங்கியுள்ள வீடு பற்றித்தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பு நிலவுகிறது.
ஆரயா பில்டிங் என்ற அபார்ட்மென்ட்டில் 14, 15 மற்றும் 16வது மாடிகளில் அமைந்துள்ள பிளாட்களை அவர் 39 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளாராம். பிளாட்டில்
கடந்த மாதம் 10ம் தேதி அந்த வீட்டிற்கான பத்திரப்பதிவு நடந்து முடிந்துள்ளதாம். 78 லட்ச ரூபாய்க்கு அதற்கான கட்டணத்தைச் செலுத்தியுள்ளார்.
ஜான்வி திரையுலகில் நடிகையாக அறிமுகமான பின் அவர் நடித்த நான்கு படங்கள் மட்டுமே இதுவரையில் வெளிவந்துள்ளது. அதற்குள் இவ்வளவு கோடிகளைக் கொடுத்து 'லக்சுரி அபார்ட்மென்ட்'களை வாங்கியுள்ளது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் ரியல் எஸ்டேட் என்பது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனி விஷயமாகும். அபார்ட்மென்ட்களே அங்கு பல கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கும். சினிமா பிரபலங்கள் கூட தனி வீடுகளை வாங்காமல் அபார்ட்மென்ட்டுகளை மட்டுமே வாங்குவார்கள்.