ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தியத் திரையுலகின் கனவுக்கன்னியாக இருந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். அவர் மும்பை ஜுஹு பகுதியில் வாங்கியுள்ள வீடு பற்றித்தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பு நிலவுகிறது.
ஆரயா பில்டிங் என்ற அபார்ட்மென்ட்டில் 14, 15 மற்றும் 16வது மாடிகளில் அமைந்துள்ள பிளாட்களை அவர் 39 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளாராம். பிளாட்டில்
கடந்த மாதம் 10ம் தேதி அந்த வீட்டிற்கான பத்திரப்பதிவு நடந்து முடிந்துள்ளதாம். 78 லட்ச ரூபாய்க்கு அதற்கான கட்டணத்தைச் செலுத்தியுள்ளார்.
ஜான்வி திரையுலகில் நடிகையாக அறிமுகமான பின் அவர் நடித்த நான்கு படங்கள் மட்டுமே இதுவரையில் வெளிவந்துள்ளது. அதற்குள் இவ்வளவு கோடிகளைக் கொடுத்து 'லக்சுரி அபார்ட்மென்ட்'களை வாங்கியுள்ளது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் ரியல் எஸ்டேட் என்பது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனி விஷயமாகும். அபார்ட்மென்ட்களே அங்கு பல கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கும். சினிமா பிரபலங்கள் கூட தனி வீடுகளை வாங்காமல் அபார்ட்மென்ட்டுகளை மட்டுமே வாங்குவார்கள்.