நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
இந்தியத் திரையுலகின் கனவுக்கன்னியாக இருந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். அவர் மும்பை ஜுஹு பகுதியில் வாங்கியுள்ள வீடு பற்றித்தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பு நிலவுகிறது.
ஆரயா பில்டிங் என்ற அபார்ட்மென்ட்டில் 14, 15 மற்றும் 16வது மாடிகளில் அமைந்துள்ள பிளாட்களை அவர் 39 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளாராம். பிளாட்டில்
கடந்த மாதம் 10ம் தேதி அந்த வீட்டிற்கான பத்திரப்பதிவு நடந்து முடிந்துள்ளதாம். 78 லட்ச ரூபாய்க்கு அதற்கான கட்டணத்தைச் செலுத்தியுள்ளார்.
ஜான்வி திரையுலகில் நடிகையாக அறிமுகமான பின் அவர் நடித்த நான்கு படங்கள் மட்டுமே இதுவரையில் வெளிவந்துள்ளது. அதற்குள் இவ்வளவு கோடிகளைக் கொடுத்து 'லக்சுரி அபார்ட்மென்ட்'களை வாங்கியுள்ளது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் ரியல் எஸ்டேட் என்பது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனி விஷயமாகும். அபார்ட்மென்ட்களே அங்கு பல கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கும். சினிமா பிரபலங்கள் கூட தனி வீடுகளை வாங்காமல் அபார்ட்மென்ட்டுகளை மட்டுமே வாங்குவார்கள்.