அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
இந்தி மற்றும் மராட்டிய மொழி சினிமாவின் காமெடி நடிகர் முனாவர் பரூக். அவ்வப்போது மேடை நாடகங்களிலும் நடித்து வருகிறவர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கபே ஒன்றில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில், முனாவர் பரூக்கின் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், முனாவர் பரூக் இந்து கடவுள்களையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இழிவுபடுத்தி பேசினார்.
இது தொடர்பாக பாஜ எம்எல்ஏ மாலினி லட்சுமணன் என்பவரின் மகன் ஏகலைவா சிங் கவுர் காவல் நிலையத்தில் முனாவர் தொடர்ந்து தனது நிகழ்ச்சிகளில் இந்து கடவுள்களையும், அமித்ஷாவையும் இழிவுபடுத்துவதாகவும் புகார் செய்தார். அதற்கான வீடியோ ஆதாரங்களையும் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து முனாவர் ரூக்கும் அவரது குழுவை சேர்ந்த 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.