கார்த்தி படத்தில் இணைந்த கல்யாணி | கடந்த 40 ஆண்டுகளாக பணத்தை மதிக்காமல் இருந்தேன் : நடிகர் சசிகுமார் | ''விஜய்சேதுபதி மகன் விஜய் மாதிரி வருவார்'': வனிதா விஜயகுமார் | ஒரே நாளில் மீட்கப்பட்ட உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு | 50 லட்சம் உதவி செய்வதாக பிரபாஸ் சொல்லவில்லை : காமெடி நடிகரின் குடும்பம் மறுப்பு | 77 லட்சம் மோசடி செய்ததாக நடிகை ஆலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளர் கைது | 24 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலீில் ரீ ரீலீஸாகும் மோகன்லாலின் ராவண பிரபு | காமெடி நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது! | தனியார் பேருந்துகள் ஓடாத கேரளா வெளிநாடு போல இருக்கிறது : 2018 இயக்குனர் சர்ச்சை கருத்து | 7 வருடங்களாக புறக்கணிக்கப்பட்ட பட வாய்ப்பு : விஷ்ணு விஷால் ஓபன் டாக் |
பிரபல பாலிவுட் நடிகர் சொஹைல்கான். இவரது சகோதரர் அர்பாஸ்கான் இவரும் நடிகர்தான். கடந்த டிசம்பர் மாதம் 25ந் தேதி இருவரும் துபாயில் இருந்து மும்பை திரும்பி உள்ளனர். அவர்களுடன் அர்பாஸ்கான் மகன் நிர்வாண் கானும் வந்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விமான நிலையத்தில் அவர்களை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அவர்களை ஓட்டலில் தனிமைபடுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இதனை உதாசீனப்படுத்தி விட்டு 3 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதுபற்றிய விவரம் அறிந்து 3 பேருக்கு எதிராக மும்பை பெருநகர மாநகராட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சொஹைல் கான் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது சொஹைல் உள்பட 3 பேரையும் மும்பையில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஓட்டலில் அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்து உள்ளனர்.
அரசு விதிகளை மீறல், நோய் பரவலுக்கு காரணமாதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் வரை அபராதமோ அல்லது 3 மாத சிறை தண்டனையோ விதிக்கப்படலாம் என்று போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.