கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
பிரபல பாலிவுட் நடிகர் சொஹைல்கான். இவரது சகோதரர் அர்பாஸ்கான் இவரும் நடிகர்தான். கடந்த டிசம்பர் மாதம் 25ந் தேதி இருவரும் துபாயில் இருந்து மும்பை திரும்பி உள்ளனர். அவர்களுடன் அர்பாஸ்கான் மகன் நிர்வாண் கானும் வந்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விமான நிலையத்தில் அவர்களை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அவர்களை ஓட்டலில் தனிமைபடுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இதனை உதாசீனப்படுத்தி விட்டு 3 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதுபற்றிய விவரம் அறிந்து 3 பேருக்கு எதிராக மும்பை பெருநகர மாநகராட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சொஹைல் கான் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது சொஹைல் உள்பட 3 பேரையும் மும்பையில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஓட்டலில் அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்து உள்ளனர்.
அரசு விதிகளை மீறல், நோய் பரவலுக்கு காரணமாதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் வரை அபராதமோ அல்லது 3 மாத சிறை தண்டனையோ விதிக்கப்படலாம் என்று போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.