ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
பிரபல பாலிவுட் நடிகர் சொஹைல்கான். இவரது சகோதரர் அர்பாஸ்கான் இவரும் நடிகர்தான். கடந்த டிசம்பர் மாதம் 25ந் தேதி இருவரும் துபாயில் இருந்து மும்பை திரும்பி உள்ளனர். அவர்களுடன் அர்பாஸ்கான் மகன் நிர்வாண் கானும் வந்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விமான நிலையத்தில் அவர்களை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அவர்களை ஓட்டலில் தனிமைபடுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இதனை உதாசீனப்படுத்தி விட்டு 3 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதுபற்றிய விவரம் அறிந்து 3 பேருக்கு எதிராக மும்பை பெருநகர மாநகராட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சொஹைல் கான் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது சொஹைல் உள்பட 3 பேரையும் மும்பையில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஓட்டலில் அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்து உள்ளனர்.
அரசு விதிகளை மீறல், நோய் பரவலுக்கு காரணமாதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் வரை அபராதமோ அல்லது 3 மாத சிறை தண்டனையோ விதிக்கப்படலாம் என்று போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.