நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
உலகமே எதிர்பார்த்து காத்துக்கிடக்கும் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளிவருகிறது. பல நாடுகளில் பிரிமியர் ஷோ, ஸ்பெஷல் ஷோ என இப்போதே களைகட்ட ஆரம்பித்து விட்டது. கடந்த வாரமே முன்பதிவுகள் தொடங்கி விட்டது.
இந்த நிலையில் படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான ஜேம்ஸ் கேமரூனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கலந்து கொள்வதாக இருந்த பிரிமியர் ஷோ உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க முடியவில்லை.
இதுகுறித்து கூறிய அவர் கூறும்போது “ஜப்பான் புரமோசன் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு டோக்கியோவில் இருந்து அமெரிக்கா திரும்பியபோது கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. நான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டேன். பல ஆண்டுகளாக பல நண்பர்களிடம் பிரியமியர் ஷோவில் சந்திப்போம் என்ற கூறியிருந்தேன். இப்போது அது நடக்காமல் போய்விட்டது. நாம் ஒன்று நினைத்தால் கடவுள் ஒன்று நினைக்கிறார்” என்கிறார் ஜேம்ஸ் கேமரூன்.