பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய்யின் தந்தையும் முன்னணி இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது படங்களில் நடித்தும் வருகிறார். அவர் கதையின் நாயகனாக டிராபிக் ராமசாமி என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை வழங்குவதாக கூறி மலேசியாவைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியரான பிரம்மானந்தம் சுப்பிரமணியம் என்பவரிடம் இருந்து 21 லட்சம் ரூபாய் பெற்றிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
பின்னர் அந்த படத்தை தானே வெளியிட்டதாகவும் அதற்காக பெற்ற 21 லட்சம் ரூபாய் பணத்தைத் திரும்பித் தராமலும் எஸ்.ஏ.சந்திரசேகர் மோசடி செய்துவிட்டதாகக் கூறி பாதிக்கப்பட்ட பிரம்மானந்தம் சுப்பிரமணியம் சார்பில் மணிமாறன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வாங்கிய 21 லட்ச ரூபாய் பணத்தை வட்டியுடன் சேர்த்து 27 லட்சம் ரூபாயை பிரம்மானந்தம் சுப்பிரமணியத்திற்கு வழங்க உத்தரவிட்டது. ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகர் பணத்தைக் கொடுக்காமல் தனக்கும் வெளிநாட்டு வாழ் நண்பரான பிரம்மானந்தம் சுப்பிரமணியத்திற்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக மணிமாறன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இது தொடர்பாக விரைவில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.