‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி |
விஜய்யின் தந்தையும் முன்னணி இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது படங்களில் நடித்தும் வருகிறார். அவர் கதையின் நாயகனாக டிராபிக் ராமசாமி என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை வழங்குவதாக கூறி மலேசியாவைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியரான பிரம்மானந்தம் சுப்பிரமணியம் என்பவரிடம் இருந்து 21 லட்சம் ரூபாய் பெற்றிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
பின்னர் அந்த படத்தை தானே வெளியிட்டதாகவும் அதற்காக பெற்ற 21 லட்சம் ரூபாய் பணத்தைத் திரும்பித் தராமலும் எஸ்.ஏ.சந்திரசேகர் மோசடி செய்துவிட்டதாகக் கூறி பாதிக்கப்பட்ட பிரம்மானந்தம் சுப்பிரமணியம் சார்பில் மணிமாறன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வாங்கிய 21 லட்ச ரூபாய் பணத்தை வட்டியுடன் சேர்த்து 27 லட்சம் ரூபாயை பிரம்மானந்தம் சுப்பிரமணியத்திற்கு வழங்க உத்தரவிட்டது. ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகர் பணத்தைக் கொடுக்காமல் தனக்கும் வெளிநாட்டு வாழ் நண்பரான பிரம்மானந்தம் சுப்பிரமணியத்திற்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக மணிமாறன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இது தொடர்பாக விரைவில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.