ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

இயக்குனர் மணிரத்னம்(66) தனது படைப்புகளால் இந்திய அளவில் பேசப்பட்டவர். தற்போது கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி உள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல்பாகம் செப்., 30ல் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு இருந்தார் மணிரத்னம்.
இந்நிலையில் மணிரத்னத்திற்கு கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு கொரோனா என முதலில் தகவல் பரவியது. ஆனால் மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளது. இருப்பினும் கோவிட் அறிகுறி தென்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளார். ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என தெரிகிறது.