சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

பழம் பெரும் பின்னணிப் பாடகரும், இசைக் கலைஞருமான பூபிந்தர் சிங் நேற்று மாலை மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 82. அவரது இறுதிச் சடங்கு இன்று(ஜூலை 19) நடைபெறும் எனஅவரது மனைவி தெரிவித்துளளார். பூபிந்தர் சிங் ஹிந்தியில் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். அவரது மறைவுக்கு பல பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பூபிந்தர் சிங் யாரென்பது இளையராஜாவின் தீவிர ரசிகர்களுக்கு நன்றாகத் தெரியும். இளையராஜாவின் இசையில் மகேந்திரன் இயக்கத்தில் 1981ம் ஆண்டு வெளிவந்த 'நண்டு' படத்தில் இடம் பெற்ற 'கைசே கஹுன்' என்ற பாடலை எஸ்.ஜானகியுடன் இணைந்து பூபிந்தர் சிங் பாடியுள்ளார்.

'நண்டு' படத்தில் இடம் பெற்ற 'அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா…., 'மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே…' ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்கள். இப்போதும் இளையராஜா ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இடம் பெற்றவை. அவற்றோடு அப்படத்தின் மற்றுமொரு பாடலான, 'கைசே கஹுன்' பாடலும் இருக்கும். மொழி புரியவில்லை என்றாலும் பூபிந்தர், ஜானகியின் குரலுக்காகவும், இசைக்காகவும் ரசிக்கப்படும் ஒரு பாடல்.
அமிரிட்சரில் பிறந்த பூபிந்தர் டில்லியில் வளர்ந்தவர். ஆல் இந்தியா ரேடியோவில் தன் இசைப் பயணத்தை ஆரம்பித்து தூர்தர்ஷனில் தொடர்ந்தவர். பங்களாதேஷைச் சேர்ந்த மிதாலி முகர்ஜி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 80களின் மத்தியில் சினிமாவில் பாடுவதை நிறுத்திவிட்டு மேடைகளில் பாடி வந்தார். மிதாலியும் பாடகிதான்.




