நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

வெப்சீரிஸில் பவி டீச்சராக நடித்து பிரபலமானவர் பிரிகிடா. உலகின் முதல் லான்-லீனியர் படமாக பார்த்திபன் இயக்கி, நடித்து சமீபத்தில் வெளியான ‛இரவின் நிழல்' படத்தில் உதவி இயக்குனராக சேரப்போனவர் அந்த படத்தில் நாயகியாகவும் மாறினார். படத்தின் தலைப்பை போல் இப்போது பார்த்திபனின் நிழலாக வலம் வருகிறார் அம்மணி. கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு மேல் நடந்த பட பிடிப்பில் அந்த யூனிட் முழுக்கவே இருந்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படம் வெளியீட்டு வேளைகளில் பார்த்திபன் இருந்த போதும் அவருடனே இருந்து பட வேலைகளை கவனித்து வந்தார்.
பத்திரிக்கையாளர் காட்சி அன்றும் பார்த்திபன் கூடவே காரில் வந்து இறங்கினார். படம் வெளியீடு அன்று காலை 4 மணி காட்சியிலும் பார்த்திபன் கூடவே அட்டை போல ஒட்டி கொண்டு நின்றார். படத்தின் எல்லா புரொமோஷன்களிலும் பிரிகிடா இல்லாமல் இல்லை. பார்த்திபன் யார் பேர் முதலில் சொல்கிறாரோ இல்லையோ பிரிகிடா பேர் முதலில் வரும். அந்தளவுக்கு பார்த்திபன் போகும் இடமெல்லாம் அவரின் நிழலாகவே வலம் வருகிறார்.
இந்த படம் வெற்றிக்காக சில மாதங்களுக்கு முன் பார்த்திபன் திருப்பதி சென்றிருந்தார். அப்போதும் அவருடன் பயணித்தார் பிரிகிடா. இந்த படத்தில் அவர் நிர்வாணக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்ல சமீபத்தில் ஒரு பேட்டியில் சேரி தொடர்பாக அவர் பேசியது சர்ச்சையானது. இந்த விஷயத்திற்கு பிரிகிடா மன்னிப்பு கேட்டார். அதைத்தொடர்ந்து பார்த்திபனும் அவர் சார்பாக தனது வருத்தத்தை பதிவு செய்தார்.