டெஸ்ட் கதை பற்றி பகிர்ந்த நயன்தாரா | எனது கேரியரையே மாற்றிய படம் டிராகன் : கயாடு லோஹர் | ஹரி ஹர வீர மல்லு படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு | இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மோகன் ராஜா | சலார் 2வை தள்ளி வைத்த பிரபாஸ் | நிம்மதியா வாழ விடுங்க : நடிகர் பாலாவின் மூன்றாவது மனைவிக்கு நான்காவது மனைவி எச்சரிக்கை | எம்புரான் ரிலீஸில் புதிய சிக்கல் : லைகாவை ஒதுக்கிவிட்டு ரிலீஸ் செய்ய திட்டம்? | ஜவான் படத்தை மறுத்தது ஏன்? : மலையாள இளம் நடிகர் விளக்கம் | லோகேஷ் 40 ரஜினி 50 அமீர்கான் 60 : கூலி படக்குழு உற்சாக கொண்டாட்டம் | குட் பேட் அட்லி டீசர் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ஆதிக் |
பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் நாயகியாக நடித்தவர் பிரிகிடா. இப்படத்தில் இவர் ஒரு நிர்வாண காட்சியில் நடித்திருந்ததால் இது பரபரப்பாக பேசப்பட்டது. அதையடுத்து இப்படம் வெளியான நேரத்தில் ஸ்லம் ஏரியாவில் கெட்ட வார்த்தைகளாக பேசுவார்கள் என்று பிரிகிடா சொன்னதும் சர்ச்சையானது. அதோடு அவர் நிர்வாணமாக நடித்த காட்சியும் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் விவாதத்துக்கு உள்ளானது.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், இரவின் நிழல் படத்தில் நான் நிர்வாணமாக நடிக்கவே இல்லை. அது ஒரு ட்ரிக் தான் என்று கூறியிருக்கிறார் பிரிகிடா. அது குறித்து அவர் கூறுகையில், அந்த நிர்வாண காட்சியில் நடிப்பதற்கு நான் குட்டியான ஒரு ஆடை அணிந்திருந்தேன். அது எலாஸ்டிக் மாதிரி இருக்கும். அதை மேலே இழுத்து விட்டால் அந்த உடை அணிந்து இருப்பதே தெரியாது. அது ஒரு ட்ரிக் தான். அந்த காட்சியில் நடிப்பதற்கு நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். 40, 50 நாட்களாக அந்த உடையை அணிந்து கொண்டே ரிகர்சல் பார்த்தேன். இன்னும் சொல்லப்போனால் அப்படி நடிப்பதை விட அந்த உடையை அணிந்து நடித்தது தான் ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால் இரவின் நிழல் படத்தில் நான் நிர்வாணமாக நடித்ததாக சொல்ல முடியாது. எலாஸ்டிக் உடை அணிந்து செய்த ஒரு மேஜிக்தான் அது என்று கூறியிருக்கிறார் பிரிகிடா.