காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் நாயகியாக நடித்தவர் பிரிகிடா. இப்படத்தில் இவர் ஒரு நிர்வாண காட்சியில் நடித்திருந்ததால் இது பரபரப்பாக பேசப்பட்டது. அதையடுத்து இப்படம் வெளியான நேரத்தில் ஸ்லம் ஏரியாவில் கெட்ட வார்த்தைகளாக பேசுவார்கள் என்று பிரிகிடா சொன்னதும் சர்ச்சையானது. அதோடு அவர் நிர்வாணமாக நடித்த காட்சியும் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் விவாதத்துக்கு உள்ளானது.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், இரவின் நிழல் படத்தில் நான் நிர்வாணமாக நடிக்கவே இல்லை. அது ஒரு ட்ரிக் தான் என்று கூறியிருக்கிறார் பிரிகிடா. அது குறித்து அவர் கூறுகையில், அந்த நிர்வாண காட்சியில் நடிப்பதற்கு நான் குட்டியான ஒரு ஆடை அணிந்திருந்தேன். அது எலாஸ்டிக் மாதிரி இருக்கும். அதை மேலே இழுத்து விட்டால் அந்த உடை அணிந்து இருப்பதே தெரியாது. அது ஒரு ட்ரிக் தான். அந்த காட்சியில் நடிப்பதற்கு நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். 40, 50 நாட்களாக அந்த உடையை அணிந்து கொண்டே ரிகர்சல் பார்த்தேன். இன்னும் சொல்லப்போனால் அப்படி நடிப்பதை விட அந்த உடையை அணிந்து நடித்தது தான் ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால் இரவின் நிழல் படத்தில் நான் நிர்வாணமாக நடித்ததாக சொல்ல முடியாது. எலாஸ்டிக் உடை அணிந்து செய்த ஒரு மேஜிக்தான் அது என்று கூறியிருக்கிறார் பிரிகிடா.