ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும், நடிகை ஐஸ்வர்யாராயும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தார்கள். திருமணத்திற்கு பிறகு அந்த அளவிற்கு இணைந்து நடிக்கவில்லை. கடைசியாக 2010ம் ஆண்டு வெளிவந்த ராவண் படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இதனை மணிரத்னம் இயக்கியிருந்தார்.
அதன்பிறகு தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். படத்திற்கு குளோப்ஜாமுன் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இதனை அனுராக் காஷ்யப் தயாரித்து இயக்குகிறார்.
குலாப்ஜாமுன் கதையை ஒரு வருடத்திற்கு முன்பே அனுராக் காஷ்யப், அபிஷேக், ஐஸ்வர்யா இருவரிடம் கூறி ஒப்புதல் பெற்றிருந்தார். ஆனால் இருவரும் வெவ்வேறு படங்களில் பிசியாக இருந்ததால் நடிக்கவில்லை. இப்போது இருவரும் தேதி ஒதுக்கி கொடுத்திருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது அபிஷேக்கிற்க பிடிக்கவில்லை. இதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் இருவரும் இணைந்து நடிக்க இருப்பது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளது.