‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும், நடிகை ஐஸ்வர்யாராயும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தார்கள். திருமணத்திற்கு பிறகு அந்த அளவிற்கு இணைந்து நடிக்கவில்லை. கடைசியாக 2010ம் ஆண்டு வெளிவந்த ராவண் படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இதனை மணிரத்னம் இயக்கியிருந்தார்.
அதன்பிறகு தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். படத்திற்கு குளோப்ஜாமுன் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இதனை அனுராக் காஷ்யப் தயாரித்து இயக்குகிறார்.
குலாப்ஜாமுன் கதையை ஒரு வருடத்திற்கு முன்பே அனுராக் காஷ்யப், அபிஷேக், ஐஸ்வர்யா இருவரிடம் கூறி ஒப்புதல் பெற்றிருந்தார். ஆனால் இருவரும் வெவ்வேறு படங்களில் பிசியாக இருந்ததால் நடிக்கவில்லை. இப்போது இருவரும் தேதி ஒதுக்கி கொடுத்திருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது அபிஷேக்கிற்க பிடிக்கவில்லை. இதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் இருவரும் இணைந்து நடிக்க இருப்பது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளது.