இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் |
பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும், நடிகை ஐஸ்வர்யாராயும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தார்கள். திருமணத்திற்கு பிறகு அந்த அளவிற்கு இணைந்து நடிக்கவில்லை. கடைசியாக 2010ம் ஆண்டு வெளிவந்த ராவண் படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இதனை மணிரத்னம் இயக்கியிருந்தார்.
அதன்பிறகு தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். படத்திற்கு குளோப்ஜாமுன் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இதனை அனுராக் காஷ்யப் தயாரித்து இயக்குகிறார்.
குலாப்ஜாமுன் கதையை ஒரு வருடத்திற்கு முன்பே அனுராக் காஷ்யப், அபிஷேக், ஐஸ்வர்யா இருவரிடம் கூறி ஒப்புதல் பெற்றிருந்தார். ஆனால் இருவரும் வெவ்வேறு படங்களில் பிசியாக இருந்ததால் நடிக்கவில்லை. இப்போது இருவரும் தேதி ஒதுக்கி கொடுத்திருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது அபிஷேக்கிற்க பிடிக்கவில்லை. இதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் இருவரும் இணைந்து நடிக்க இருப்பது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளது.