நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு |
பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட் வரை சென்றுள்ள நடிகை ப்ரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கு சித்தார்த் சோப்ரா என்ற சகோதரர் உள்ளார். இவர் புனேயில் தனியார் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு போதைபொருள் விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து சமீபத்தில் இந்த விடுதியில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது அந்த விடுதியில் போதை பொருள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விடுதியின் உரிமையாளரான சித்தார்த் மற்றும் விடுதி மேலாளர் ஆகியோர் மீது போதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் ரெய்டு நடத்திய சமயம் சித்தார்த் இந்தியாவில் இல்லை, அவர் ப்ரியங்காவுடன் நியூயார்க்கில் இருப்பது தெரியவந்தது. சித்தார்த் இந்தியா வந்தவுடன் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட இருக்கிறது.