பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
ரங்கூன் பட சூட்டிங்கின் போது சைப் அலிகானுக்கும், ஷாகித் கபூருக்கும் இடையே உரசல் இருந்ததாக முன்னர் கூறப்பட்டது. சமீபத்தில் இது பற்றி கரீனா கபூர் கானிடம் கேட்ட போது, அப்படியா? உண்மையில், எனக்கு தெரிந்த வரையில் அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. நான் அந்த சூட்டிங் செட்டுக்கு போகவில்லை. எனக்கு அதற்கு நேரம் இல்லை. இரவு நேரங்களில் நானும் பயணத்தில் இருப்பேன். அவர்களும் பயணத்தில் இருப்பார்கள். அப்படி ஒரு பரபரப்பாக இருப்போம். இருந்தும் செட்டில் நடந்த சுவாரஸ்யமான, நகைச்சுவையான விஷயங்களை சைப் என்னுடன் பகிர்ந்து கொள்வார். ஷாகித்திடம் பேசுவது அவருக்கு பிடிக்கும். ஷாகித் ஒரு நல்ல மனிதர் எனவும் கூறுவார். அப்படி இருக்கும் போது அவர்களுக்குள் உரசல் எப்படி வந்தது என எனக்கு தெரியவில்லை. சைப் ரொம்ப அமைதியான ஆள். அவரும் ஷாகித்தும் சினிமா துறையில் பல வருடங்களாக இருந்து வருகின்றனர். அப்படி இருக்கும் போது அனைவரும் அவர்களை பற்றியே பேசுவது ஏன் என எனக்கு தெரியவில்லை என்றார். ரங்கூன் படம் இந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதியன்று ரிலீசாக உள்ளது.