புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
கமல், ரஜினி, மாதவன், தனுஷ் ஆகியோர் தமிழ்நாட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்று வெற்றிக்கொடி நாட்டியவர்கள். ஆனாலும் இவர்கள் நடித்தது என்னவோ விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கான படங்கள்தான். ஆனால் இவர்களுக்கு முன்பே பாலிவுட்டுக்குச் சென்று பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற ஒருவர் இருந்தார். அவர்தான் ரஞ்சன்.
ரஞ்சனின் வாள் சண்டை இன்றளவும் பேசப்படுகிற ஒன்று. 1944ம் ஆண்டு வெளிவந்த சாலிவாகனன் என்ற படத்தில் எம்.ஜி.ஆரும், ரஞ்சனும் போட்ட வாள்சண்டையில் அனல் பறந்தது. ஆரம்ப காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு இருந்த அளவிற்கு ரஞ்சனுக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. இருவரில் யார் வாள் சண்டை வீரர் என்கிற வாதம் டீக்கடை தோறும் நடந்த காலம் ஒன்று உண்டு.
திருச்சி மாவட்டம் அரியலூரைச் சேர்ந்த வி.நாராயண சர்மாவின் மகன் வேங்கட ரமணன். இந்த குடும்பம் சென்னை மயிலாப்பூருக்கு வந்ததும். வேங்கட ரமணனுக்கு நாட்டியத்தின் மீதும், இசையின் மீதும் ஆர்வம் வந்தது. இரண்டையும் முறைப்படி கற்றுக் கொண்டார். கல்லூரி நாட்களில் ஆடலிலும், பாடலிலும் சிறந்து விளங்கினார். அதை பார்த்த ஜெமினி ஸ்டூடியோ மேலாளர் கிட்டு அவரை அப்போது ஜெமினி ஸ்டூடியோ தயாரித்து வந்த அசோக்குமார் படத்தில் புத்தராக நடிக்க வைத்தார். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்தார். தியாகராஜ பாகவதர் ஹீரோ.
அதன் பிறகு வேங்கட ரமணனுக்கு சினிமா ஆசை அதிகமானது. ஜெமினி ஸ்டூடியோவையே சுற்றி சுற்றி வந்தார். ஒருமுறை அப்போதைய புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஜிடன் பானர்ஜி. வேங்கட ரமணனின் தோற்றத்தை பார்த்து வங்காளி என்று நினைத்து அவரை ஒரு படத்தில் நடிக்க வைப்பதாக உறுதியளித்தார். அவரது பெயரையும் ரஞ்சன் என்று மாற்றினார். ஹீரோ வாய்ப்பு கிடைக்கிறது என்பதால் பெயர் மாற்றத்துக்கு அவர் ஒப்புக் கொண்டார்.
1941ம் ஆண்டு வெளிவந்த ரிஷ்யசிருங்கர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். 1943ல் வெளிவந்த மங்கம்மா சபதம் படம்தான் அவரை நட்சத்திர நடிகராக உயர்த்தியது. இப்படி படிப்படியாக வளர்ந்த ரஞ்சனின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் சந்திரலேகா. 1948ம் ஆண்டு வெளிவந்த தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்ட பட்ஜெட் படம். இதில் எம்.கே.ராதா ஹீரோ, டி.ஆர்.ராஜகுமாரி ஹீரோயின், ரஞ்சன் டெரர் வில்லன்.
இந்தப் படத்தை ஜெமினி ஸ்டூடியோ இந்தியில் எடுத்தபோது அதிலும் ரஞ்சன் வில்லன். அங்கு சந்திரலேகா வெற்றிபெறவே தொடர்ந்து இந்தி வாய்ப்புகள் குவிந்தது. நிஷான், மங்களா, சிந்துபாத், தி ஜெய்லர் உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அப்படியே விட்டிருந்தால் இந்தியில் நிரந்தர நடிகராகியிருப்பார். ஆனால் அவரை மீண்டும் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தார் சாண்டோ சின்னப்பத் தேவர்.
சாண்டோ சின்னப்ப தேவர் நீலமலைத் திருடன் என்கிற கதையை எம்.ஜி.ஆருக்கு தயார் செய்து வைத்திருந்தார். ஹாலிவுட் பாணியிலான ராபின் ஹூட் கதை. இந்தப் படத்தின் கதை பிடித்திருந்தாலும் அப்போது நாடோடி மன்னன் படத்தில் பிசியாக இருந்த எம்.ஜி.ஆர் இதற்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. அதனால் கோபம்கொண்ட தேவர், எம்.ஜி.ஆர் அளவிற்கு அப்போது ஆக்ஷன் ஹீரோவாக இருந்த ரஞ்சனை இந்தியிலிருந்து அழைத்து வந்து நடிக்க வைத்தார். படம் பெரிய வெற்றி பெற்றது.
அதன் பிறகு தொடர்ந்து தமிழில் நடிக்க ஆரம்பித்தார் ரஞ்சன். தமிழ் சினிமாவில் விமானம் ஓட்டத் தெரிந்த ஒரே நடிகர் ரஞ்சன்தான். நடனம், ஓவியம், இசைஞானம், எழுத்தாளர் என பல துறைகளில் சகலகலாவல்லவனாக இருந்த ரஞ்சன் 1969ம் ஆண்டு நடித்த கேப்டன் ரஞ்சன் படத்துக்கு பிறகு நடிக்கவில்லை. அதன் பிறகு தனது மனைவி டாக்டர் கமலாவுடன் அமெரிக்காவில் செட்டிலான ரஞ்சன் தனது 65வது வயதில் காலமானார். தமிழ் சினிமா மறந்துபோன அற்புத கலைஞர்களில் ரஞ்சனும் ஒருவர்.