பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
நடிகை வித்யாபாலன் இந்திய பெண்களின் அடையாளமாக உலக நாடுகளில் பார்க்கப்படுகிறார். இதனால் அவரை இந்திய பாரம்பரியத்துடன் படம் எடுக்க உலகத்தில் உள்ள புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்கள், டிசைனர்கள் விரும்புகிறார்கள். வருகிற மே 1ந் தேதி முதல், 11ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இந்த விழாவின் விளம்பர தூதுவராக வித்யா பாலன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக அவர் தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டிசைனர் அகிரா கிசசோவா. எலிசபெத் படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றவர். மற்றொருவர் சூசல் டிமாசி. இவர்கள் இருவரும் வித்யாபாலனை ஆஸ்திரேலியாவின் அடையாளமாக இருக்கும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று புடவையில் விதவிதமாக படம் எடுத்தனர். புடவை தவிர சீனா, மற்றும் ஆஸ்திரேலியா கலாச்சார உடைகள் அணிவித்து படம் எடுத்தனர். இவர்கள் இருவரும் ஆசியர் ஒருவரை படம் எடுப்பது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலியாவில் புடவையை பிரபலபடுத்த இது நல்ல வாய்ப்பாக அமையும் என்று டிசைனர் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.