ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தின் வெற்றியில் மிகப்பெரிய பங்கு வகித்தவர் படத்தொகுப்பாளராக பணியாற்றிய மகேஷ் நாராயணன். அதனை தொடர்ந்து மலையாளத்தில் இயக்குனராகவும் மாறிய அவர் பஹத் பாசிலை வைத்து டேக் ஆப், சி யூ சூன், மாலிக் மற்றும் உயரே உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த நிலையில் தற்போது மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில், நயன்தாரா என மலையாள சினிமாவில் முன்னனி நட்சத்திரங்கள் நடித்து வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இது கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது.
இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அவர் பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதற்கான ஒன்லைனை சல்மான் கானிடம் அவர் சொல்லிவிட்டதாகவும் அது சல்மான்கானுக்கு பிடித்து விட்டதால் முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்துவிட்டு தன்னிடம் வருமாறு கூறியுள்ளார் என்றும் பாலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இந்த படத்தை சல்மான் கானின் சகோதரியும் அவரது கணவரும் இணைந்து தயாரிக்கிறார்கள் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.