கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை | தமிழ் சினிமாவில் குறைந்து வரும் காமெடி…, ரைட்டர்கள் இல்லையா? | 3வது வாரத்திலும் முன்னேறும் 'டூரிஸ்ட் பேமிலி', பின்வாங்கும் 'ரெட்ரோ' | தக் லைப் : ஓடிடி, சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா ? | ஸ்லிம் ரகசியத்தை கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பதில்! | மீண்டும் நடிப்புக்கு திரும்பிய எமி ஜாக்சன்! | ரவி மோகன் - கெனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகி சுசித்ரா! | பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத் தலைப்புக்கு சிக்கல்! | நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி |
உலகின் மிகப்பெரிய திரைப்பட விழாவான 78வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. வருகிற 24ம் தேதி வரை நடக்கிறது. இந்த ஆண்டு விழாவிலும் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
பாலிவுட் நடிகைகளான ஐஸ்வர்யா ராய் பச்சன், அலியா பட், ஜான்வி கபூர் ஆகியோர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடக்கவிருக்கிறார்கள். அலியா பட் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் முதல் முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
கடந்த 2003ம் ஆண்டு கேன்ஸ் நடுவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் ஐஸ்வர்யா ராய். கடந்தாண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் உயரிய கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற இயக்குநர் பயால் கபாடியா இந்த ஆண்டு விழாவில் ஜூரியாக பணியாற்ற இருக்கிறார்.
தொடக்க விழாவில் நடிகை ஊர்வசி ரவுட்டேலாதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்தார் ஊர்வசி. அவர் கையில் இருந்த கிளி வடிவிலான பர்ஸ் பலரையும் கவர்ந்தது. அந்த கிளி பர்ஸின் விலை 4 லட்சத்து 68 ஆயிரம் என்கிறார்கள்.
இந்த விழாவில் போட்டி பிரிவிலும், பொது பிரிவிலும் பல இந்திய படங்கள் திரையிடப்படுகிறது. மேலும் பல இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.