இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? |
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்தவர் சிம்ரன். அப்போது இளம் முன்னணி நட்சத்திரங்களுடன் பல படங்கள், சீனியர் நடிகர்களுடன் சில படங்கள் என உச்சத்தில் இருந்தார். திருமணமான பின் நடிப்பதை குறைத்துக் கொண்டார். மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தாலும் அவருக்கான சரியான படங்கள் அமையவில்லை. அந்த ஏக்கத்தை 'டூரிஸ்ட் பேமிலி' படம் மாற்றியுள்ளது. தமிழ் சினிமாவில் மீண்டும் அடுத்த கட்ட ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவும் அவர் தயாராக இருப்பதும் அதற்கு ஒரு காரணம்.
'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய புரமோஷன்களில் அவர் அதிகம் கலந்து கொள்ளவில்லை. வெளிநாட்டில் இருந்ததுதான் அதற்கு ஒரு காரணம். ஆனால், படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்பு நடந்த போது அதில் கலந்து கொண்டு உருக்கமாகப் பேசினார் சிம்ரன்.
நிகழ்ச்சிக்கு சிம்ரன் வந்த போது அவருடன் டிவி நடிகை ஆனந்தியும் கூடவே வந்திருந்தார். சிம்ரனின் பெண் பவுன்சர் போல பக்கத்திலேயே இருந்தார். விசாரித்த போது சிம்ரனுக்கு கடந்த சில வருடங்களாக மேனேஜர் போல எப்போதும் துணையாக ஆனந்தி இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.