இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” |
சென்னையைச் சேர்ந்த நடிகையான சமந்தா, தெலுங்கில் பிஸியான நடிகையாக இருந்ததால் ஐதராபாத்திலேயே சொந்த வீடு வாங்கி செட்டிலானவர். பின்னர், தன்னுடைய முதல் தெலுங்குப் பட ஹீரோவான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே பிரிந்தார். சமந்தாவுக்கும், அவர் நடித்த வெப் சீரிஸ்களை இயக்கிய ராஜ் நிடிமொரு என்பவருக்கும் காதல் என கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகின. இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமந்தா சமூக வலைத்தளங்களில் வெளியிடவே அதைப் பலரும் உண்மை என நம்பினார்.
இதனிடையே, அவர்கள் இருவரும் ஒன்றாக வசிப்பதற்காக வீடு தேடிக் கொண்டிருப்பதாகவும் கூட செய்திகள் பரவின. சமந்தாவின் மேனேஜர் அந்த காதல் விவகாரம் வெறும் வதந்தி தான் என சொன்னதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ராஜ் நிடிமொரு, ஷியாமலி என்ற சினிமா உதவி இயக்குனரை ஏற்கெனவே திருமணம் செய்து கொண்டவர். அவர்கள் பிரிந்து வாழ்கிறார்களா அல்லது விவகாரத்து பெற்றுவிட்டார்களா என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் ஷியாமலி சமூக வலைத்தளத்தில், “என்னைப் பற்றி நினைக்கும், என்னைப் பார்க்கும், என்னைப் பற்றிக் கேட்கும், என்னுடன் பேசும், என்னைப் பற்றிப் பேசும், என்னைப் பற்றிப் படிக்கும், எழுதும், இன்று என்னைச் சந்திக்கும் அனைவருக்கும் நான் அன்பையும், வாழ்த்துகளையும் அனுப்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அதுவும் சேர்ந்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ஷியாமலி பதிவில் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் என்னைப் பற்றி என்ன வேணாலும் பேசுங்க, உங்களுக்கு என் வாழ்த்துகள் என அதை கடந்து போவதையே இப்படி குறிப்பிட்டுள்ளார்.