தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

பாலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோகருக்கு 'பாடி டிஷ்மார்பியா' என்ற வினோத நோய் ஏற்பட்டுள்ளது. இது ஒரு மனிதனின் உடல் தோற்றத்தை வேறொரு தோற்றமாக மாற்றும் வினோத நோய்.
தற்போது உடல் மெலிந்து காணப்படும் கரண் ஜோகர் முகத்திலும் தோற்ற மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான அவரது புகைப்படங்களை பார்த்து இந்த நோய் அவருக்கு இருப்பது மற்றவர்களுக்கு தெரிய வந்தது. கரண் ஜோகரின் தோற்றத்தை பார்த்து பாலிவுட் திரை உலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கரண் ஜோகர் கூறி இருப்பதாவது: எனக்கு பாடி டிஸ்மோர்பியா என்கிற பிரச்னை இருக்கிறது. நம் உடம்பு நமக்கே பிடிக்காது. ஆடையில்லாமல் உடம்பை பார்க்க சுத்தமாக பிடிக்காது. என்னால் என்னையே கண்ணாடியில் பார்க்க முடியாது. இது அரிய வகை நோய். இது குறித்த கேள்விகளால் நான் டயர்டாகிவிட்டேன்.
அவர்களுக்கு என்னை பற்றிய உண்மை தெரியவில்லை. பல ஆண்டுகளாக எனக்கு இதய வீக்கம் தொடர்பான பிரச்னையும் இருக்கிறது. இந்நிலையில் தைராய்டு பாதிப்பு இருப்பது அண்மையில் தெரிய வந்தது. இந்த நோய்களுக்காக நான் கடைபிடிக்காத டயட்டே இல்லை. எல்லா ஒர்க்-அவுட்டும் செய்து பார்த்துவிட்டேன். ஆயிரம் விதமான டயட்டுகள், பல நூறு வகையான ஒர்க் அவுட்டும் செய்து பார்த்துவிட்டேன்.
இவ்வாறு கரண் ஜோகர் கூறியுள்ளார்.