முத்தையா இயக்கத்தில் பிரபு, கார்த்திக் மகன்கள் | 'மகாராஜா' - விஜய் சேதுபதியின் 50வது படம் தந்த திருப்பம் | லண்டனில் படமாகும் டாக்சிக் | ‛சூரரைப்போற்று' ஹிந்தி ரீ-மேக்கான ‛சர்பிரா' ரிலீஸ் தேதி அறிவிப்பு | மீண்டும் கெட்ட வார்த்தை பேசி ரசிகர்களின் கண்டனத்திற்கு ஆளான மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | அமீர்கான் மகனின் அறிமுக படத்திற்கு நீதிமன்றம் தடை | ரூ.90 லட்சம் மோசடி நடிகை ஷில்பா மீது வழக்கு | கமலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற தலவன் படக்குழு | ரவீனாவுக்கு அடித்த ஜாக்பாட் | எதிர்நீச்சல் குழுவினருக்கு நினைவுப்பரிசு கொடுத்த திருசெல்வம் |
லோக்சபா தேர்தல் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. மகாராஷ்டிராவில் நேற்று அதற்கான ஓட்டுப்பதிவு நடந்தது. பல பாலிவுட் பிரபலங்கள் ஓட்டுச்சாவடிக்குச் சென்று ஓட்டளித்தனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனே அவரது கணவர் ரன்வீர் சிங் உடன் வந்து ஓட்டளித்தார். கர்ப்பிணியான தீபிகா ஓட்டளிக்க வந்த போது அவரை புகைப்படக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக தீபிகாவை ஒரு கையில் அணைத்தபடி அழைத்துச் சென்றார் ரன்வீர். யாரும் தன்னை தள்ளிவிட்டுவிடக் கூடாது என தனது கர்ப்ப வயிற்றில் கை வைத்தவாறே கவனத்துடன் சென்றார் தீபிகா.
தாய்மை பற்றி தீபிகா, ரன்வீர் அறிவித்த பின்பு தீபிகா படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். அதனால், அவரது கர்ப்பம் குறித்து சில ஊடங்களில் சந்தேகத்தை எழுப்பினர். இந்நிலையில் தீபிகா கர்ப்ப வயிற்றுடன் வந்து ஓட்டளித்தது அந்த ஊடகங்களின் சந்தேகத்திற்கு பதிலளித்தது.
தீபிகாவுக்கு செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் எனத் தெரிகிறது.