ஹிந்தியில் அறிமுகமாகும் பஹத் பாசில் | ராம், மிரிச்சி சிவா படத்தின் டப்பிங் பணி தொடங்கியது | சீமான், சிவகார்த்திகேயன் சந்திப்பு பின்னனி என்ன? | கண்டதற்கு எல்லாம் பொங்கும் போராளி நடிகர்கள் கள்ளச்சாராய சாவில் ‛கள்ள மவுனம்' ஏன்? | கள்ளக்குறிச்சி சென்ற விஜய் : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் | அந்த நடிகையின் சாயலில் இருந்ததால்தான் பாலிவுட் பட வாய்ப்பே கிடைத்தது : டாப்ஸி | வில்லன் ரோலை விரும்பும் கமல் | கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும் : விஷால் | கள்ளச்சாராய வியாபாரிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : கமல் | தனுஷை இயக்கும் போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா |
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி, தமிழ் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் குழிக்குள் தவறி விழும் இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது இவர்தான். நடிப்பில் நல்ல திறமை கொண்ட இவர், அதிகம் சர்ச்சைகளில் சிக்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ரீநாத் பாஷி விழா மேடையில் ஆவேசம் படத்தில் இடம் பெற்ற ஜடா என்கிற பாடலை பாடினார். அப்போது கீழ் இருந்த ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தவே, அவரும் உற்சாக மிகுதியால் சில மோசமான வார்த்தைகளையும் பிரயோகித்தார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் அவர் இப்படி பொதுவெளியில் மோசமாக வார்த்தைகளை பேசியதற்காக தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் நடிகர் ஸ்ரீநாத் பாஷிக்கு இது போன்ற விஷயங்கள் புதிதல்ல.. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பேட்டியில் போது அந்த நிகழ்ச்சியில் பெண் தொகுப்பாளரிடம் இதேபோன்று அநாகரிகமான வார்த்தைகளை ஸ்ரீநாத் பாஷி பேசியதால் போலீஸாரால் கைது செய்யப்பட்டார் என்பதும் அதனாலேயே அவருக்கு மலையாள திரையுலகில் ரெட் கார்டு போடப்படும் அளவிற்கு நிலைமை சீரியசாக சென்றது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.