ஹிந்தியில் அறிமுகமாகும் பஹத் பாசில் | ராம், மிரிச்சி சிவா படத்தின் டப்பிங் பணி தொடங்கியது | சீமான், சிவகார்த்திகேயன் சந்திப்பு பின்னனி என்ன? | கண்டதற்கு எல்லாம் பொங்கும் போராளி நடிகர்கள் கள்ளச்சாராய சாவில் ‛கள்ள மவுனம்' ஏன்? | கள்ளக்குறிச்சி சென்ற விஜய் : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் | அந்த நடிகையின் சாயலில் இருந்ததால்தான் பாலிவுட் பட வாய்ப்பே கிடைத்தது : டாப்ஸி | வில்லன் ரோலை விரும்பும் கமல் | கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும் : விஷால் | கள்ளச்சாராய வியாபாரிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : கமல் | தனுஷை இயக்கும் போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா |
மும்பை : பிரபல ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா. இவர், 2021ம் ஆண்டு ஆபாச படங்களை தயாரித்து, அதை மொபைல் செயலிகளில் பதிவேற்றியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார்; பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் நடிகை ஷில்பாவும், கணவர் குந்த்ராவும் மீண்டும் மோசடி வழக்கில் சிக்கியுள்ளனர். தங்க திட்டம் என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த திட்டத்தில் தன்னிடம் 90 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நடிகை மற்றும் அவரது கணவர் மீது, மும்பை வர்த்தகர் பிரித்விராஜ் சரேமல் கோத்தாரி என்பவர் மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: 'சத்யுக் கோல்ட்' என்ற பெயரில் ஷில்பாவும், குந்த்ராவும் இணைந்து தங்க திட்டத்தை துவங்கினர். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு லாபகரமான தங்கம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி என்னை சேர்த்தனர். இதை நம்பி, அவர்களது தங்க திட்டத்தில் 90 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தேன். முதிர்வு காலம் 2019 ஏப்ரல் 2 என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள், நான் செய்த முதலீட்டுக்கான தங்கத்தை தராமல் ஏமாற்றினர். எனவே, கோர்ட் தகுந்த நடவடிக்கை எடுத்து, என் பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவுடன் ஷில்பா ஷெட்டி கையெழுத்திட்ட தங்க திட்டம் தொடர்பான கடிதம் மற்றும் சத்யுக் கோல்ட் பிரைவேட் நிறுவனம் வழங்கிய விலைப் பட்டியலையும் கோர்ட்டில் கோத்தாரி தாக்கல் செய்தார்.
இந்த மோசடி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.