ஹிந்தியில் அறிமுகமாகும் பஹத் பாசில் | ராம், மிரிச்சி சிவா படத்தின் டப்பிங் பணி தொடங்கியது | சீமான், சிவகார்த்திகேயன் சந்திப்பு பின்னனி என்ன? | கண்டதற்கு எல்லாம் பொங்கும் போராளி நடிகர்கள் கள்ளச்சாராய சாவில் ‛கள்ள மவுனம்' ஏன்? | கள்ளக்குறிச்சி சென்ற விஜய் : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் | அந்த நடிகையின் சாயலில் இருந்ததால்தான் பாலிவுட் பட வாய்ப்பே கிடைத்தது : டாப்ஸி | வில்லன் ரோலை விரும்பும் கமல் | கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும் : விஷால் | கள்ளச்சாராய வியாபாரிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : கமல் | தனுஷை இயக்கும் போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா |
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று பதிவு செய்தனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான், மும்பை பந்த்ராவில் கேலக்ஸி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே கடந்த ஏப். 14-ல் அதிகாலை 5 மணியளவில் பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடினர். இதில் யாருக்கும் காயமில்லை.
இந்தசம்பவ குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி விக்கி குப்தா(24), சாகர்பால்(21) ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
இந்த வழக்கில் இன்று மும்பை குற்றப்பிரிவு போலீசார் நடிகர் சல்மான்கானிடம் வாக்குமூலம் பெற்று பதிவு செய்தனர். கடந்த 4-ம் தேதி அவரது சகோதரரிடம் அர்பாஸ் கானிடமும் வாக்குமூலம் பெற்றனர்.