ரஜினிகாந்துடன் ஆஸ்திரேலியா நாட்டு தூதர் சந்திப்பு | லாவண்யா - வருண் தேஜ் திருமணம் இத்தாலி நாட்டில் ? | என் கண்ணீரை துடைத்தார், என்னை தாங்கி நின்றார் : காதலரின் போட்டோவை பகிர்ந்து இலியானா நெகிழ்ச்சி | 'விடுதலை 2' : மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம் ? | மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல் | சத்தமில்லாமல் புதிய படத்தில் நடித்து வரும் கவின் | பாலகிருஷ்ணாவின் 109வது படத்தின் அறிவிப்பு வெளியானது | வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு : சின்மயி போன்று தைரியமாக வெளியே சொல்லணும் - பாடகி புவனா சேஷன் | நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி | பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் |
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று சைப் அலிகான், கரீனா கபூர். 2012ல் காதல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தான் கரீனா இரண்டாவதாக ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தற்போது கரீனா மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என பாலிவுட் மீடியாக்கள் சிலவற்றில் செய்திகள் வெளிவந்தன. அவற்றை கரீனா மறுத்துள்ளார்.
அது குறித்து சமூக வலைத்தளத்தில், “நான் கர்ப்பம் இல்லை. தான் ஏற்கெனவே இந்திய மக்கள் தொகைக்கு நிறைய செய்துவிட்டேன் என சைப் சொன்னார்” என கொஞ்சம் கிண்டலாகவும் பதிவிட்டிருந்தார்.
சைப் அலிகான் அவரது முதல் மனைவி நடிகை அம்ரிதா சிங் இருவருக்கும் ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். மகள் சாரா அலிகான் தற்போது பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகை. மகன் இப்ராஹிம் குழந்தை நட்சத்திரமாக ஒரே ஒரு படத்தில் நடித்துள்ளார். தற்போது கரண் ஜோஹர் இயக்கி வரும் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.
சைப் அலி கானுக்கு இரண்டு மனைவிகள் மூலம் மூன்று மகன்கள், ஒரு மகள் இருப்பதைத்தான் கரீனா கபூர் கிண்டலாகப் பதிவிட்டிருக்கிறார்.