விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், ஷாருக்கான், அஜய் தேவ்கான், ரன்வீர் சிங், அக்ஷய் குமார் ஆகியோர் புகையிலை மற்றும் பான்மசாலா விளம்பரங்களில் நடித்திருக்கிறார்கள். கடும் எதிர்ப்பு கிளம்பவே அக்ஷய்குமார் மட்டும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டதோடு, தான் ஒப்பந்தம் செய்திருந்த கம்பெனிகளுடனான ஒப்பந்தத்தையும் ரத்து செய்தார்.
இந்த நிலையில மும்பையை சேர்ந்த தமன்னா ஹாசீம் என்பவர் மும்பை உயர்நீதி மன்றத்தில் நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், அஜய் தேவ்கன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இளைஞர்களை தீயவழியில் ஈபட வைக்கும் போதை புகையிலை விளம்பரத்தில் நடித்துள்ள இவர்கள் சமுதாயத்துக்கு கேடான செயல்களில ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சொல்வதை நம்பும் ரசிகர்களை இவர்கள் தவறான வழியில் நடத்திச் செல்கிறார்கள். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வழக்கின் மனுவில் தமன்னா ஹாசிம் தெரிவித்திருக்கிறார்.




