மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. வருகிற 28ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் இந்திய சினிமாவில் இருந்து கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், மாதவன், நயன்தாரா, தமன்னா, இயக்குனர் பா.ரஞ்சித், ஐஸ்வர்யாராய், தீபிகா படுகோனே உட்பட பலர் கலந்து கொண்டு உள்ளார்கள். இவர்கள் அனைவருமே சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்று உள்ளார்கள். இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் லே மஸ்க் என்ற திரைப்படம் மற்றும் பா.ரஞ்சித்தின் வெட்டுவம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
விழாவில் பேசிய பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ‛‛இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜுரியாகும் வாய்ப்பு எனக்கு கிடைத்து உள்ளது. இதை நான் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. எனது 15 ஆண்டுகால சினிமா பயணத்தில் இது ஒரு நம்ப முடியாத பயணமாக இருக்கிறது என்று கூறியுள்ள தீபிகா படுகோனே, கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு இந்தியா செல்லும் நிலை மாறி, கேன்ஸ் திரைப்பட விழா இந்தியாவிற்கு வரும் நிலை விரைவில் ஒருநாள் உருவாகும்'' என்று தெரிவித்திருக்கிறார்.