600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. வருகிற 28ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் இந்திய சினிமாவில் இருந்து கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், மாதவன், நயன்தாரா, தமன்னா, இயக்குனர் பா.ரஞ்சித், ஐஸ்வர்யாராய், தீபிகா படுகோனே உட்பட பலர் கலந்து கொண்டு உள்ளார்கள். இவர்கள் அனைவருமே சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்று உள்ளார்கள். இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் லே மஸ்க் என்ற திரைப்படம் மற்றும் பா.ரஞ்சித்தின் வெட்டுவம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
விழாவில் பேசிய பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ‛‛இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜுரியாகும் வாய்ப்பு எனக்கு கிடைத்து உள்ளது. இதை நான் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. எனது 15 ஆண்டுகால சினிமா பயணத்தில் இது ஒரு நம்ப முடியாத பயணமாக இருக்கிறது என்று கூறியுள்ள தீபிகா படுகோனே, கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு இந்தியா செல்லும் நிலை மாறி, கேன்ஸ் திரைப்பட விழா இந்தியாவிற்கு வரும் நிலை விரைவில் ஒருநாள் உருவாகும்'' என்று தெரிவித்திருக்கிறார்.