பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

மலையாள நடிகர் சங்கத்திற்கு (அம்மா) 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் மோகன்லால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வருகிற 19ம் தேதி 2021-2023ம் ஆண்டுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது.
இந்த தேர்தலுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தலைவர் பதவிக்கு நடிகர் மோகன்லால், பொதுச்செயலாளர் பதவிக்கு இடைவேளை பாபு ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்களை வாபஸ் பெறும் தேதி முடிந்த நிலையில், நேற்று மனுக்கள் பரிசீலனை நடந்தது.
இதில் தலைவர் பதவிக்கும், பொதுச்செயலாளர் பதவிக்கும் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து தலைவராக மீண்டும் நடிகர் மோகன்லால் தேர்வு செய்யப்படுகிறார். இதே போல் பொதுச்செயலாளராக இடைவேளை பாபுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். மற்ற பதவிகளுக்கும் 19ம் தேதி வாக்குபதிவு நடக்கிறது. அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படுகிறது.